தமிழ் இலக்கியங்களில் நாயன்மார் கதைகளைச் சொல்லும் பெரிய புராணத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது சரித்திரங்களைச் சொல்வதனால் இதிகாசம் என்று சொல்வதற்கு ஏற்ற பெருமையை உடையது; நாயன்மார்களுடைய வரலாற்றைக் கவிச்சுவையும் பக்திரசமும் துளும்ப உரைப்பது. சேக்கிழார் இயற்றியது பெரிய புராணம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சேக்கிழாரை, "பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ"என்று பாராட்டுகிறார்.இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர் சேக்கிழார்; சென்னையை அடுத்த குன்றத்தூரில் தோன்றினவர். சேக்கிழார் என்பது அவருடைய குலப்பெயர். அருள்மொழித் தேவர் என்பது இயற்பெயர். அவர் சோழ அரசனுடைய மந்திரியாக இருந்து விளங்கினார்.பெரிய புராணம் தேவாரத்துக்கு உரை கூறும் நூல்; நாயன்மார் வரலாற்றைக் கூறும் சரித்திரம்; சொற்பொருள் இன்பம் தரும் காப்பியம்; சிவபக்தியை ஊட்டும் இலக்கியம்; படிப்பாருக்கு அமை தியையும் பண்பையும் உண்டாக்கும் தெய்விகப் பனுவல்.
- | Author: Ki Va Jagannathan
- | Publisher: Nilan Publishers
- | Publication Date: Dec 01, 2024
- | Number of Pages: 128 pages
- | Binding: Paperback or Softback
- | ISBN-10: 8198357149
- | ISBN-13: 9788198357144
- Author:
- Ki Va Jagannathan
- Publisher:
- Nilan Publishers
- Publication Date:
- Dec 01, 2024
- Number of pages:
- 128 pages
- Binding:
- Paperback or Softback
- ISBN-10:
- 8198357149
- ISBN-13:
- 9788198357144