தமிழ் நாடென்பது ஒரு தனி நாடு அந் நாட்டுக்கெனத் தனிமொழி, தனி வழக்க ஒழுக்கங்கள் முதலியன உண்டு. பிற நிலங்கள் நாடாதற்கு முன்னரே, தமிழ்நாடு தன் முயற்சியால் தனக்கெனச் சிறப்பாக இலக்கிய இலக்கணம், மருத்துவம், சோதிடம், வேதம் முதலியன வகுத்துக் கொண்டது. ஈண்டுத் தமிழ்நாட்டுக்கு வேதம்-மறை சிறப்பாக இருந்தது என்பது கருதற்பாற்று. அப் பண்டை மறை இறந்துபட்டதென்று தமிழ் மக்கள் கூறுப. இக் கூற்றை வலியுறுத்தப் பழந்தமிழ் நூற்சான்றுகளும் உள்ளன. இந்நாளில் தமிழ் மக்கள், நால்வர் அருளிய தேவார திருவாசகங்களையும், ஆழ்வார் பன்னிருவர் அருளிய நாலாயிரப் பிரபந்தத்தையும் தங்கள் வேதங்களென்று போற்றுதல் எவரும் அறிந்ததொன்றே.
- | Author: Thiru V. Kalyanasundaram
- | Publisher: Blurb
- | Publication Date: Oct 17, 2025
- | Number of Pages: 76 pages
- | Binding: Paperback or Softback
- | ISBN-13: 9798331203276
- Author:
- Thiru V. Kalyanasundaram
- Publisher:
- Blurb
- Publication Date:
- Oct 17, 2025
- Number of pages:
- 76 pages
- Binding:
- Paperback or Softback
- ISBN-13:
- 9798331203276